85 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
#Gold
#Smuggling
Prathees
2 years ago
இலங்கை சுங்க மாணிக்க மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகளால் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இலக்கம் UL 501 இல் பிரான்ஸ், பாரிஸில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, அதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிறைய தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்கப் கையிருப்பின் மொத்த எடை 4 கிலோ 611 கிராம் என்பதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 85 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என இலங்கை சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.