ஆயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளது அவன்கார்ட் நிறுவனம்

#SriLanka #Investigation #Lanka4 #sri lanka tamil news
Prathees
9 months ago
ஆயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளது அவன்கார்ட்  நிறுவனம்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா செக்யூரிட்டி நிறுவனத்தினால் அவன்கார்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட 103 தானியங்கி மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்கள் என்பன அவன்கார்ட் நிறுவனத்திடம் உரிய ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீளப் பெறப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 2011ஆம் ஆண்டு கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் இதுவரை கையளிக்கப்படாத துப்பாக்கிகளில் 13 ஆயுதங்கள் காணவில்லை.

 இதில் 04 தானியங்கி துப்பாக்கிகளும் 03 அரை தானியங்கி துப்பாக்கிகளும் உள்ளடங்குவதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கும் அவன்கார்ட் மரைடைம் சர்வீஸ் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 2019 ஜனவரி 24ஆம் திகதி காலாவதியாகியுள்ளதால் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு