காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
#India
#GunShoot
Mani
2 years ago
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒத்துழைத்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்று காலை பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரஜோரி மாவட்டம் தசல் மிஹாரி கிராமத்தில் தேடுதல் வேட்டையின் போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்டனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர், இதன் விளைவாக இரு தரப்பினரும் தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.