மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
#SriLanka
#Lanka4
#srilankan politics
#Journalist
Kanimoli
2 years ago
கிழக்கு மாகாணத்தின் கெளரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையிலான சிநேக பூர்வ சந்திப்பு இன்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இதன் போது ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் என்ற முறையில் எமது மாகாணத்தின் புதிய ஆளுநரை வரவேற்று மாவட்டத்தின் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட போது.
இந்நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வி.ஜிவானந்தன் மற்றும் சிரேஷ்ட, இளம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.