தையிட்டி விகாரையில் 3ஆம் கட்டமாக போராட்டம் ஆரம்பம்
#SriLanka
#Jaffna
#Protest
#Lanka4
#Thaiyiddi
Kanimoli
2 years ago
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் கட்ட போராட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஏற்கனவே இரண்டு கட்டமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் அதே பகுதியில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.