50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கமா? அதிர்ச்சி தரும் குளோசப் புகைப்படம்!

பாலிவுட் திரையுலகின், குயின் என கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை கைப்பற்றிய பின்னர், 1997ல் மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். இதை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
'அவுர் பியார் ஹோகயா' என்கிற படத்தின் மூலம், அறிமுகமாகி... பின்னர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். முன்னணி நடிகையாக இருந்த போது , சில டாப் நடிகர்களுடன் காதல் சர்ச்சியிலும் சிக்கியவர் ஐஸ்வர்யா ராய். பின்னர், குரு படத்தில், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணத்திலும் முடியவே, தற்போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரத்தியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும்... உலகளவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மனதுக்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ஐஸ்வர்யா ராய்... இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2 பாகங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய்யின் கிளோஸ் அப் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய்யின் மேக்கப்பை தாண்டி, அவர் முகத்தில் பல்வேறு சுருக்கங்கள் இருப்பதை காண முடிகிறது.



