பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உஷார் நிலையில் வைத்துள்ள ஜப்பான்!

#world_news #NorthKorea #Japan
Mayoorikka
3 years ago
பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உஷார் நிலையில் வைத்துள்ள ஜப்பான்!

ஜப்பான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை எச்சரிக்கையாக வைக்க முடிவு செய்துள்ளது. 

மே 31 முதல் ஜூன் 11 வரை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருவதாக வடகொரியா அறிவித்ததை அடுத்து இது நடந்துள்ளது.

 வடகொரியா தான் உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துள்ளதாகவும், அதற்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன்னின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 இருப்பினும், இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என ஜப்பான் சந்தேகம் எழுப்பியுள்ளது. 

இதற்குப் பதிலளித்த ஜப்பான், தனது எல்லைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் அழிக்கத் தயங்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4