மீண்டும் ஜெனிவா பொறியில் இலங்கை
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது, எனினும் இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
நிகழ்ச்சி நிரல்களின் படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டார்க் வரும் 19 ஆம் திகதி இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார் .
அன்றைய தினமே அவர் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது