பிரதி அதிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு 4 பொலிஸ் குழுக்கள்
#SriLanka
#Police
#Investigation
#Lanka4
#GunShoot
#sri lanka tamil news
Prathees
2 years ago
அம்பலாங்கொட தர்மசோக பாடசாலையின் பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நேற்று (26) பெந்தர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் முன் முகத்திலுள்ள இரத்தக் கறைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரதி அதிபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.