காத்தாடியால் ஏற்பட்ட தகராறு: கையை இழந்த இளைஞன்
மாத்தறை, வேரகம்பிட்ட தர்மவன்ச மாவத்தையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற காத்தாடி சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனையாளராக பணிபுரியும் 16 வயது சிறுவன் கை துண்டிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு குழுவினர் காத்தாடிகளை பறக்கவிட்டு, அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டதை அடுத்து இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
கையை இழந்த இளைஞன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 37 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் பரிசோதகர் ஹெட்டியாராச்சி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.