நானோ உரம் அதிகளவில் முதலீடு செய்ததால் பாரிய நட்டம்: விவசாய அமைச்சர்
#SriLanka
#Minister
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#fertilizer
Mugunthan Mugunthan
2 years ago
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நானோ உரத்தில் கணிசமான அளவு அந்நிய செலாவணி முதலீடு செய்யப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனதெரிவித்துள்ளார்
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவி்க்கையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தனக்குத் தெரிந்த வரையில் லஞ்சப் புகார்கள் வந்துள்ளன என்றார்.
அதேவேளையில் தணிக்கை அறிக்கையும் தொகுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அமரவீர, இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.