தொலைதூரம் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த ஈரான்

#Missile #Test #Iran
Prasu
3 years ago
தொலைதூரம் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த ஈரான்

ஈரான் 2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை இன்று (25) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

 இதன்படி 1,500 கிலோ (3,300 எல்பி) போர்க்கப்பலைச் சுமந்து செல்லக்கூடிய 2,000 கிமீ (1,243 மைல்கள்) தூரம் வரை செல்லக்கூடிய கோரம்ஷஹர் 4 பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் பரிசோதணை செய்துள்ளது.

இது குறித்து ஈரானிய பாதுகாப்பு மந்திரி முகமதுரேசா அஷ்டியானி கூறுகையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை திட்டங்களில் ஒன்றான ஈரான், அதன் ஆயுதங்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை அடையும் திறன் கொண்டவை என்று கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, தெஹ்ரான் தனது “தற்காப்பு” ஏவுகணை திட்டத்தை மேலும் மேம்படுத்துவதாக கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4