ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கோரி வெளிநாட்டவர்கள் கொழும்பில் போராட்டம்
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். "நியாயத்தை வழங்கு" என கோஷத்தை எழுப்பியவாறு நடத்திய போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஒன்றுகூடிய, இலங்கையில் உள்ள பல பாகிஸ்தானிய குடும்பங்கள், நிரந்தர பதிவினை விரைவுபடுத்துமாறும், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தின. அவர்களின் கைகளில் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் எழுதப்பட்ட, “அகதிகளை மரணத்திற்கு திருப்பி அனுப்பாதீர்கள், அகதிகளும் மனிதர்களே” என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வழங்கப்படும் நிவாரணத்தை குறைத்து கொழும்பில் உள்ள ஐ.நா அகதிகள் அலுவலகம் மூடப்படும் என தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அச்சமடைந்துள்ளனர். “பாகிஸ்தான், மியன்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன், நைஜீரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 800 பேர் அகதிகளாக இலங்கையில் தங்கியுள்ளனர்.
அவர்கள் சட்ட ரீதியாகவே இலங்கையில் உள்ளனர். அந்த நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமே பொறுப்பு” என சமூக மற்றும் அமைதி மையத்தின் மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கூறுகிறார். இரண்டு முதல் 10 வருடங்கள் வரை, வெளிநாட்டு அகதிகளாக அவர்கள் நீர்கொழும்பு, பாணந்துறை, தெஹிவளை மற்றும் கல்சிசை ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் மியன்மரில் பௌத்த இராணுவ ஆட்சியில இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள், மேலும் சிலர் பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
அரசியல், மத மோதல்கள் மற்றும் போர்களின் விளைவாக, அவர்கள் பிறந்த நாடுகளிலிருந்து தப்பிய மக்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் உறுப்பு நாடுகளில் குடியேற்றப்பட்டு, பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாட்டில் நிரந்தர குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை கவலை எழுந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் குறைப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் இவர்கள் மத்தியில் உள்ளது.
'' என மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் வாழும் வெளிநாட்டு அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் மருந்தாளர்களாக காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு இலங்கையில் வேலை செய்யும் உரிமை இல்லை. பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுவர்கள் கல்வியை இழந்துள்ளதால், அவர்களை விரைவில் நிரந்தர குடியிருப்பாளர்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வேண்டும் என போராட்க்காரர்கள் கோரியுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புப் போரினால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து பல வருடங்களாக இந்தியா, நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியா புலிகளை வளர்க்கிறதா என வடக்கில் விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியில் இந்தியா தலையிடுகிறதா என்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வடக்கின் அரசியல் கட்சியொன்று அச்சம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) இது தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக போராளிகளின் கட்சி தெரிவித்துள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு (ATA) எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. "புலிகள் அமைப்பிற்கு இந்தியா உயிர் கொடுக்கிறதா, இந்தியா பணம் கொடுக்கிறதா, இவர்கள் என்ன செய்ய வேண்டும் அவர்கள் கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு எதிராக ஏதாவது செய்கிறார்களா? என பல கேள்விகள் கேட்கிறார்கள்.
” என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் ஐ.கதிர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். கொழும்பில் இருந்து பயங்கரவாத புலனாய்வு அதிகாரிகள் தனது யாழ்ப்பாண வீட்டிற்கு வந்து நான்கு மணித்தியாலங்கள் ஐம்பது நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக அவர் கூறுகிறார். அவரது குடும்ப உறுப்பினர்களை அச்சமடைய வைக்கும் வகையில் இரண்டாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்திய பயங்கரவாத விசாரணை அதிகாரிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அதில் இந்தியாவின் தலையீடுகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
"பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்தியா நிறைய உதவி செய்திருந்தாலும், இலங்கை அரசு இந்தியாவுடன் வெளிப்படையாக நல்லெண்ணத்தைக் காட்டுகிறது, ஆனால் உள்ளுக்குள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது." இந்திய சார்பு மனப்பான்மைக் கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழித்தல், மாகாண சபைகளுக்குரிய அனைத்து அதிகாரங்களையும் கையகப்படுத்துதல், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
"இந்த மாநாடு குறித்தும் நீண்ட நேரம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அதிகாரிகளுடன் இந்த விவகாரங்களை நான் விவாதித்தேன் என்பது அனைவரும் அறிந்த உண்மை."
போராளிக் கட்சி கடந்த எட்டு வருடங்களாக ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது.
"சில தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றன. எனினும் இது குறித்து அறிக்கை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஏனைய தூதரகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்குவோம்." என்கிறார் கட்சியின் செயலாளர்.