பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் முன்னடுக்கப்பட்ட நிகழ்வு!
#SriLanka
#School
#Police
#Kilinochchi
#School Student
Mayoorikka
2 years ago
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 25.05.2023 கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பொலீஸ் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



