10 மணி நேர விமான தாமதம்: தென் கொரியாவில் வேலை வாய்ப்பை இழந்த 48 தொழிலாளர்கள்
10 மணி நேர விமான தாமதம் காரணமாக தென் கொரியாவில் பணிக்காக செல்லவிருந்த 48 தொழிலாளர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த திகதியில் வெளியேறாதமைக்கான காரணங்களினால், குறித்த ஊழியர்களின் வேலைகள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர், ஊடகப் பேச்சாளர் செனரத் யாப்பா,
"தற்போது, தென் கொரிய மனித வள நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் புதிய திகதிகள் எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் அறிவிப்பின் படி அறிவிக்கப்படும்." நேற்றிரவு 8.05க்கு தென்கொரியாவின் இச்சிகோனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 10 மணிநேரம் தாமதமாகியமையே இதற்குக் காரணம்.
இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது.