தயாசிறி ஜயசேகரவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
#SriLanka
#Police
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
BMICH யில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பாராளுமன்ற உறுப்பினர் தன்னை தாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு புகைப்படக் கலைஞர் முறைப்பாடு செய்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.