மாலியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 இலங்கை அமைதி காக்கும் படையினர் காயம்
மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கண்ணிவெடியில் அகப்பட்டு இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாக ஐநா செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை தெரிவித்தார்.
அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கண்ணிவெடியில் அகப்பட்டு அதில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவரும் மேலும் மூன்று இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில் உள்ள டெசாலிட் பகுதியில் உள்ள அவர்களது முகாமுக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.
வெடிப்புச் சம்பவத்தின் போது கவச வாகனத்தில் இருந்து சரக்கு வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கியதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.