உள்நாட்டுக் கலவரங்களால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்துாபி நிர்மாணிக்கப்படவுள்ளது - ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#ஜனாதிபதி
Mugunthan Mugunthan
2 years ago
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் கலவரங்கள் அல்லது உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது.