இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Accident
#Italy
Mayoorikka
2 years ago
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது இலங்கையை சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.