பெரும் எதிர்பார்ப்போடு இலங்கை சென்னை கப்பல் சேவை ஆரம்பம் டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
#India
#SriLanka
#Lanka4
#Boat
#Ship
Kanimoli
2 years ago
21 May 2023 சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்திற்க்காக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதோடு குறிப்பிட்ட கப்பல், சென்னையில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல், இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது.
இந்த கப்பலில் மூன்று நாள் பேக்கேஜில் பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும் 24 மணி நேரத்திற்குள், இந்தப் கப்பல் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்கு சென்று வரவுள்ளதோடு இந்த கப்பலில், ஒரே நேரத்தில் 1, 600 பேர் வரை பயணிக்க முடியுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.