தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள்

#Elephant
Mani
3 years ago
தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 25க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. சமீபத்தில், இந்த குழுவை சேர்ந்த இரண்டு யானைகள் தளி பெரிய ஏரியில் நீந்தி குளித்தன. ஏரியில் இரண்டு யானைகள் இருப்பது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவற்றைப் பார்க்க வந்த ஏராளமான மக்களை கவர்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஏரிக்கு சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும், தளி போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் தங்கி, யானைகள் வரும் பாதையில், மின் இணைப்பை துண்டித்து, வழி ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ஏரியில் இருந்து வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தளி பெரிய ஏரியில் இரண்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4