காலியில் 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்
#SriLanka
#Police
#Investigation
#children
#Lanka4
#sri lanka tamil news
#Missing
Prathees
2 years ago
காலி நெலுவ, தெல்லவ மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு ஆண் சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.
01 வயது 3 மாதங்கள்,இ 10 வயது மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.
இக்குழந்தைகளின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தற்காலிகமாக வேலை செய்வதற்காக மியானாவடுர பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
அவ்வாறு செய்துகொண்டிருக்கும் போது நேற்றிரவு முதல் பிள்ளைகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் 119க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுவரை காணாமல் போன குழந்தைகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
சம்பவம் தொடர்பாக நெலுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளனர்.