மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது
#SriLanka
#Arrest
#Police
#Robbery
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
வத்தளை, நீர்கொழும்பு, கணேமுல்ல மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இம்புல்கொட மற்றும் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட 05 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.