காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..
#SriLanka
#Colombo
#weather
#Lanka4
Prabha Praneetha
2 years ago
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.