கொடைக்கானலில் மலர் கண்காட்சி தேதி அறிவிப்பு! மே26, 27, 28 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெறும் என தகவல்
#India
#Breakingnews
Mani
2 years ago

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளு குளு சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்த குவிகின்றனர். மேலும் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதனால், கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற பிரையண்ட் பூங்காவில் கடந்த 6 மாதங்களாக முன்பே பூச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பூச்செடிகளில் ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, மொத்தம் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கொடைக்கானலில் மே 26, 27, 28 ஆகிய தேதிகளிலும், பிரையண்ட் பூங்காவிலும் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



