சுருக்குவலை தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் ஐவர் கைது
#SriLanka
#Boat
Kanimoli
2 years ago
சட்டவிரோத சுருக்கு வலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு படகுகளும் அதிலிருந்த ஐவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பம் இன்று அதிகாலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பிணையில் விடுவித்துள்ளதாகவும் அவர்களது வழக்கு எதிர்வரும் புதன் கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளாக கடற்றொழில் நீரில் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.