டெங்கு பரவுவதை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்தும் சக்தி என்னிடம் உள்ளது: மேர்வின் சில்வா
அரசாங்கம் எனக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்கு பரவுவதை பாதகமாக மாற விடாமல் ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்துவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் பேசுவேன் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தற்போதைய சுகாதார அமைச்சர் எனக்கு நல்ல நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர் என்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அவர் அனைத்து அதிகாரிகளையும் ஒரு வட்ட மேசைக்கு அழைத்து டெங்கு பரவாமல் தடுக்க இரண்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார். "அமைச்சர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.
நான் ஆட்சியில் இருந்தபோது அதைச் செய்தேன், ஒரு நபர் மட்டுமே எதிர்த்தார். இப்போது டெங்கு ஒரு தொற்றுநோயாக மாறுகிறது," என்று சில்வா கூறினார்.
அரசாங்கம் உடனடியாகக் கண் திறந்து செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
பதவிகள், சம்பளம், வாகனங்கள் எதுவும் வழங்காமல் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களின் ஆதரவுடன் டெங்கு பரவுவதை ஒரு வாரத்திற்குள் தடுத்து நிறுத்துவேன் என மேலும் தெரிவித்தார்.
டெங்குவைக் கட்டுப்படுத்த அந்த வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் செவிசாய்க்கவில்லை என்றால் கடுமையான முடிவு எடுக்கப்படும் என எச்சரித்தார்.