வெடிபொருட்களுடன் 07 பேர் கைது
#SriLanka
#Mannar
#Arrest
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Prathees
2 years ago
மன்னார் வாங்கலை கடற்கரையில் வெடிபொருட்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று வாங்கலை வடக்கு கடற் கரையோரப் பகுதியில் தேடுதல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது 07 சந்தேகநபர்கள் உரிய வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை கைது செய்யும் போது, வார்டா ஜெல் எனப்படும் 10 வெடிகுண்டுகள் மற்றும் 18 டெட்டனேட்டர்கள், பல டைவிங் உபகரணங்கள் மற்றும் டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.