பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

#Tamil Nadu #Temple #Holy sprit
Mani
11 months ago
பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள பள்ளூர் கிராமத்தில் உள்ள வாராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நெய் தீப வழிபாடு நடைபெற்றது

 முன்னதாக, வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய்களில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினர்.

 நெமிலி, அரக்கோணம், காஞ்சிபுரம், பணப்பாக்கம், ஓச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.