பெருந்திரளான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட களுத்துறை மாணவியின் சடலம்
#SriLanka
#Death
#Student
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
களுத்துறை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
களுத்துறை நாகொடையில் உள்ள அவரது வீட்டில் மத சடங்குகளின் பின்னர் அட்டவில பொது மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பெருந்திரளான மக்களின் பெருமூச்சுக்கு மத்தியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து இன்று காலை களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.