தாயினால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மாத வயதுடைய சிறுத்தைக்குட்டியொன்று மீட்பு
#SriLanka
#Lanka4
#Tiger
Prabha Praneetha
2 years ago

தாயினால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு மாத வயதுடைய சிறுத்தைக்குட்டியொன்று தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் மீட்கப்பட்டுள்ளது.
குட்டியை தாயுடன் சேர்க்க அவர்கள் முயற்சி செய்த போதிலும், சிறுத்தை குட்டியை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டவில்லை.
பலவீனமான சிறுத்தைக்குட்டியை ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலையில் பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் .
சிறுத்தையை பணியாளர்கள் கையாண்டதன் பின்னர் மனித வாசனை காரணமாக தாய் குட்டியை நிராகரித்திருக்கலாம் என ரந்தெனிகல வைத்தியசாலையின் கால்நடை வைத்தியர் டொக்டர் அகலநாக பிந்தெனிய தெரிவித்துள்ளார்.



