இவ்வருட ஆசிய கோப்பை தொடரை இலங்கையில் நடத்த திட்டம்
#India
#Srilanka Cricket
#Pakistan
Prasu
2 years ago

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் 2023 ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து போட்டிகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு சமீபத்தில் அதிகரித்தது,
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்கள் அரசாங்க அனுமதி இல்லாததால் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததாகக் கூறினார்.
அறிக்கையின்படி, இந்த இடம் மாற்றும் திட்டத்தில் பாகிஸ்தானின் பங்கேற்பு தெளிவாக இல்லை, செப்டம்பர் 2 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வை பாகிஸ்தான் புறக்கணிக்கக்கூடும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
ஆசியக் கோப்பையை நடத்துவதற்கு ஓமன் முன்வந்ததாகவும், ஆனால் நிபந்தனைகளை வைத்து இலங்கை ஒரு விருப்பமாக கருதப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.



