இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதம் ..
#SriLanka
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
சிட்னி நீதிமன்றில் இன்று(4) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜையான தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் வழக்கு விசாணையில்; ஈடுபட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த விட்டதாகவும் இந்த தாமதங்களினால் பெரும் தொகையை செலவிட நேரிட்டு வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, அடுத்த நீதிமன்ற அமர்வில், உரிய நீதிமன்ற கட்டணத்தை நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.



