இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
#India
#Death
#Pakistan
#drugs
#GunShoot
Prasu
2 years ago

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தானில் இருந்து அடையாளம் தெரியாத 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இதைப்பார்த்த இந்திய வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
அவர்களிடம் இருந்து 3 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களை பற்றிய விவரங்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருகின்றனர்.



