ஆதிவாசி தலைவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

மஹாவலி அதிகாரசபையின் ரம்புக்கன் ஓயா பிரதேசத்தில் உள்ள தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களை வெளிப்படுத்தி பல்வேறு பயிர்ச் செய்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னியாலத்தோ சமர்ப்பித்த ரிட் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை செப்டம்பர் 8-ம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ரம்புக்கன் ஓயா பிரதேசத்தில் உள்ள தனது பூர்வீக நிலத்தை வெளிப்படுத்த மகாவலி அதிகாரசபை தீர்மானித்துள்ளதாகவும் அதற்குரிய காணியை சோளம் பயிரிடுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் மகாவலி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக மனுவில் உள்ள பழங்குடியின தலைவர் கோரியுள்ளார்.
இதனால் தனது சமூகத்திற்கு கடும் அநீதி இழைக்கப்படுவதாகவும், எனவே உரிய தீர்ப்பை செல்லாது என உத்தரவிடுமாறு கோரி ஆதிவாசி தலைவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.



