13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்
#SriLanka
#children
#Tamil
Prabha Praneetha
2 years ago

பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ - எகொடஉயன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் எகொட உயன தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



