அறையில் என்னைத் தள்ளிவிட்டு டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தார் - பிரபல அமெரிக்க எழுத்தாளர்

#America #Sexual Abuse #Lanka4 #Case #Trump
Prasu
3 years ago
அறையில் என்னைத் தள்ளிவிட்டு டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தார் - பிரபல அமெரிக்க எழுத்தாளர்

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். ஆனால், அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததுநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த இ.ஜீன் கரோல் கூறியதாவது:- 1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனிலுள்ள பெர்க்டார்ப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பைச் சந்தித்தேன். 

அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து டிரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, டிரஸ்சிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார். 

2019-ல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தக் குற்றச்சாட்டை கூறி உள்ளேன். அவரைப் பார்த்து பயந்துதான், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன். 

ஆனால் இதை வெளியே கூறாமல் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன். அதற்காகதான் தற்போது உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது" என கூறினார். 

ஆனால், டிரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா, டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இ.ஜீன் கரோல் பணத்துக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், அந்தஸ்துக்காகவும் அரசியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4