பரிசோதனையின் பின் மற்றுமொரு தொகை முட்டை விநியோகம்
#srilankan politics
Prabha Praneetha
2 years ago

இந்தியாவில் இருந்து கடந்த 19ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் மாதிரிகளை பரிசோதித்த பின்னர் அவரை கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த முட்டைகள் நாளை பரிசோதிக்கப்படவுள்ளன.
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்த முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளை (24) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது



