கண்திருஷ்டி கழிக்கும் முறை

#spiritual #God #Lifestyle #Lanka4
Kanimoli
1 year ago
கண்திருஷ்டி கழிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கட்டி கர்பூரத்தை கொழுத்தி வைக்க வேண்டும். இப்போது கற்பூரம் எரிந்து கொண்டே தண்ணீரில் மிதக்கும். அப்போது

அரி ஓம் கணபதியே நம. சர்வ தோஷமும்,
சர்வ வியாதியும் கண்ணேறு மனக் கொதிப்பு தீட்டு முறைப்பாடு, பில்லி ஏவல் பிசாசு சகல சத்திராதிகளையும் எரி எரி சுடு சுடு நசி மசி நசி ஓம் சிவாய சிவாய நம்.

என்று 21 தடவை தண்ணீரைப் பார்த்து ஓதி ( நீரில் கற்பூரம் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். கற்பூரம் போதவில்லை என்றால் வேறு கற்பூரம் எரிய செய்து மிதக்கும்படி செய்யலாம் ) பின் அந்த தண்ணீரை மூன்று முறை முகத்தில் தெளித்து பின் குழந்தையைத் தூக்கி கை கால்களை உதற செய்து அனுப்புக. அதிக பணம் வேண்டுமானால் தாயத்துக் கட்டலாம்.

இதுபோலவே பெரியவர்களுக்கும் செய்யலாம் கிராமங்களில் இதுபோல் வேர் கட்டுதல், தண்ணீர் எரிதல், ஆகியவற்றை செய்வதை தாங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம். மேற்சொல்லிய முறைகள் நல்ல பலன் தரும்.

இதுபோல் குழந்தைகளுக்கு கண்பட்டுவிட்டது என்பார்கள். இதற்கு முன் சொல்லிய முறைதான் என்றாலும் கூட ஒரு முறை சொல்லுகிறேன். படிப்பதற்கு விளையாட்டாகத் தான் இருக்கும். ஆனால் அதிகம் விஷயம் உண்டு.

கட்டச்சி கண், நெட்டச்சி கண், கருப்பி கண், சிவப்பி கண், முண்டக்கண், ஆந்தைகண், பச்சி கண், பாம்பு கண் சுடு சுடு சுடு.
பிரம்மரிஷி