வடமராட்சி பிள்ளையார் ஆலய சிலை உடைக்க முயற்சி!
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#Lanka4
#Tamil People
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை கடையர்களால் உடைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கிறது.
பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்ட போது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இந்த சிலையும், அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதால் சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அடியார்கள் சிலர் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விடயம் குறித்து அப்பிரதேச மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .