சித்தரைப் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு யாழில் ஆலயங்களில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள்!
#SriLanka
#Jaffna
#New Year
#Festival
#Temple
Mayoorikka
2 years ago

இனிய தமிழ் சித்தரைப் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.
அந்தவகையில் தமிழ் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.
இதனை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ செ. ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடாத்திவைத்தார்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.









