சுப நேரம் தொடங்கும் வரை ரயில்-பஸ் சேவை மிகவும் குறைவாகவே இருக்கும்
#Bus
#Train
#SriLanka
#sri lanka tamil news
#New Year
#Lanka4
Prathees
2 years ago
புத்தாண்டு தினத்தில் பஸ் போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று காலை தடைக்காலம் தொடங்கும் என்பதால் சுபநேரத்தின் பின்னர் பேருந்து சேவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மாத்திரம் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
25 அல்லது 30 பஸ்கள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.