ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மரணம்...
#Police
#Death
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்யும் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சேவைகளை பெற்றுக்கொண்டிருக்கும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாக நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிகிச்சையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் கூறுகின்றனர்.