இளம் பெண்களை கருக்கலைப்பு செய்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த போலி மருத்துவர் கைது

#Arrest #doctor #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இளம் பெண்களை கருக்கலைப்பு செய்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த போலி மருத்துவர் கைது

கருக்கலைப்பு வைத்தியர் போல் நடித்து கருக்கலைப்பு செய்ய வந்த யுவதிகளை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் களப்படை தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (11ம் திகதி) வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்தேகத்திற்குரிய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இளம் பெண்களை கருக்கலைப்புக்காக ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை அவர்களுக்கு வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் வளன ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் ஜோடியாக,   சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளை தொலைபேசியில் அழைத்து கருக்கலைப்பு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்காக 35,000 ரூபா அறவிடப்படும் எனவும் கருக்கலைப்பு செய்வதற்கு ஹோட்டலுக்கு வருமாறும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

காதலர்களாக நடித்த இரு பொலிஸாரையும் சந்தேக நபர் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்வதற்காக குறித்த பெண்ணை ஹோட்டல் அறைக்கு அழைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேகநபர் சில காலமாக கருக்கலைப்பு வைத்தியராக செயற்பட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவின் அறிவுறுத்தலின் பேரில் நிலைய அதிகாரி திரு.இந்திக்க வீரசிங்க தலைமையில் தலைமைப் பரிசோதகர் மகேந்திரா, இன்ஸ்பெக்டர் ஜனிதா, சார்ஜன்ட் (428) ஜெயலால் மற்றும் ஏனைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!