கொம்பனிகளிற்குள் அடிமையாகி இயல்பற்ற மக்களாக மீளவும் போர் ஒன்றில் மக்கள் தள்ளப்படலாம் - முத்து சிவமோகன்
கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் காலபோகத்திற்கான உரம் உள்ளிட்ட உள்ளூடுகள் வழங்குதலை தனியாரிடம் கையளிப்பது தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாள் சந்திப்பு இன்று காலை 9 மணியளவில் பன்னங்கண்டி கமக்காரர் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரணைடு நீர் பாய்ச்சல் திட்டத்தின் கீழ் சிறுபோக செய்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த வேளையிலே விவசாய அமைச்சர் சில தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்
அந்த வகையில், காலபோகத்திற்கான உள்ளீடு விடயங்களை தனியார் மயமாக்கி அவர்கள் ஊடாகவே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளதாக தகவல்களை வெளியிட்டிரு
உண்மையில் இந்த சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கா
இவ்வாறான சூழலில் இலங்கை தனது கொள்கையாக தனியார் மய்படுத்தலிற்குள் இறங்கிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, கடந்த முன்னாள் ஜனாதிபதி விவசாயிகள் மற்றம் விவசாயத்தின் மீதான மேலெழுந்தவாரியான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாக இன்று அவர் பதவியை விட்டு விலகிய நிலையில் இருக்கின்றார்.
தற்போதுள்ள அரசும் அனைத்தையும் தனியார் மயப்படுத்தலில்ஈ விவசாயத்திலும் தனியார் மயப்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் மூலம் தற்பொழுது உள்ள ஜனாதிபதிக்கும் எதிர்காலத்தில் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை திடகாத்திரமாக எதையும் கூற முடியாவிட்டாலும், இந்த தனியார் மயமாக்கல் ஒன்றின் ஊடாக நாட்டை வளப்படுத்துமா அல்லது மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமா என்பதை வரையறைப்படுத்தி கூறமுடியாவிட்
அதேவேளை, இந்தியாவில் அவ்வாறான போராட்டங்களை நடார்த்தக்கூடிய சூழலைக்கூட இந்த மண்ணில் நடார்த்த முடியாத வகையில் சட்ட ஏற்பாடுகளையும் செய்துகொண்டு
தனியார் கொம்பனிகளிடம் எங்களுடைய அனைத்து பொறுப்புக்களையும் அரசு ஒப்படைக்குமாக இருந்தால், உள்ளீடுகளை மட்டுமல்ல எங்களுடை உற்பத்தி
அதுமாத்திரமன்றி, இந்த நாட்டில் எவ்வளவு உற்பத்தி விளைய வேண்டும் என்பதையும் இதே தனியார்தான் நிர்ணயிக்கப்போ
இவ்வாறு அனைத்தையும் தனியார்களே நிர்ணயிப்பார்களாக இருந்தால், எதிர்காலத்தில் எமது காணிகளும் கொம்பணிகளிடமே சென்றடையும் சூழல் உருவாகும். அவ்வாறு உருவாகின்றபொழுது, இதே உற்பத்தியார்கள் அந்த கொம்பனிகளிடம் பணியாற்றும் நிலையும் உருவாகும்.
இது 14ம், 15ம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கொம்பனிகள் எவ்வாறு நாட்டுக்குள் வந்து பின்னாட்களில் அந்த கொம்பனிகளின் ஆதிக்கம், 400 ஆண்டுகளிற்கு மேல் எம்மை ஆண்டு அடிமைப்படுத்தி சென்றது போன்ற ஒரு சூழலை இதே கொம்பனிகள் இதே மண்ணில் ஏற்படுத்தாது என்றும் சிந்திக்க வேண்டும்.
விவசாயம் மாத்திரமல்ல. பல்துறை சார்ந்த தனியார் மயமாக்கல் மூலம் மொத்த நாடுமே கொம்பனிகளிற்குள் அல்லது சர்வதேச கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம்.
இந்த தனியார்மயமாக்கலை மிக மிக நிதானமாக இந்த அரசு கையாளாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டின் மொத்த மக்களுடைய கேள்விக்குறியாக மாறும். இந்த தனியார்மயமாக்கல் என்ற விடயத்தில் அரசும், அரசுசார்ந்த அதிகாரிகளும், துறைசார் நிபுனர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
அனுபவிக்கும்போதுதான் இதன் சாதக பாதக நிலை தொடர்பில் திடகாத்திரமாக கூற முடியும். இருந்தபோதிலு்ம நான் முன்கூட்டியே கூறியது போன்று, அதாணி கொம்பனிக்கு எதிராக இந்தியாவில் எழுந்த விவசாயிகளின் எழுச்சி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவல நிலைமையையும் அந்த சட்டத்தை மாற்றியமைக்குமாறு மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கையையும் எதிர்காலத்தில் இங்கும் நடைபெறாதிருக்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.