இலங்கையில் சில பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்து விசேட வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Sri Lanka President
#Gazette
#government
#Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையில் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.