பாரதிராஜாவின் ஆசீர்வாதத்தோடு திகில் படத்தை இயக்கப் புறப்பட்ட பெண் சிங்கம்.
#Actress
#Director
#TamilCinema
Mani
2 years ago
.jpg)
இதற்கு முன்பு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐசுஜான்சி , `நாவல்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அபிஷேக் ஜோசப்ராஜ், அதிரை சௌந்தரராஜன் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஐசுஜான்சி பேசுகையில், "உண்மையை நிஜம் என்று நாம் நினைக்கும் போது, இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும், உண்மையான எண்ணங்கள் யதார்த்தத்தை மாற்றும் எண்ணங்கள் என்று நினைக்கிறோம். இதை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது.
முழுக்க முழுக்க திகில், த்ரில்லர் என்று படக்கதையை உருவாக்கி உள்ளேன்", என்றார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அருணாச்சல குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை இசை: ரகுநாத், ஒளிப்பதிவு: வசந்தகுமார்.



