பொருட்கள் கொள்வனவு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படவும்! பொலிஸார் வேண்டுகோள்
#SriLanka
#Sri Lanka President
#Police
#Festival
#Food
#Tamil Food
#Lanka4
Mayoorikka
2 years ago

பண்டிகைக் காலங்களில் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மோசடியாளர்கள், காலாவதியான பொருட்களை மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடும்.
எனவே, பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.



