விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு!
#SriLanka
#Sri Lanka President
#Ministry of Education
#education
#Student
#School Student
#Lanka4
Mayoorikka
2 years ago

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு (தரம் 2 - 4 மற்றும் 7 -10) மாணவர்களை சேர்ப்பதற்கான கடிதங்களை ஏப்ரல் 21 வரை அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கூறியுள்ளது.
இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை தரங்களுக்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



