மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை: தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை
#SriLanka
#Sri Lanka President
#strike
#taxes
Mayoorikka
2 years ago

வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மருத்துவம், பல்கலைக்கழகம், வங்கி, பொறியியலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று கலந்துகொண்டு அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.



